Tuesday 7th of May 2024 12:47:48 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பரிசோதனைக்கூட முடிவு: மூவருக்கு கொரோனாத் தொற்று!

யாழ்.பரிசோதனைக்கூட முடிவு: மூவருக்கு கொரோனாத் தொற்று!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல் முகாமைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரிசோதனை தொடர்பில் நாளாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையிலேயே அவர்“ இதனைத் தெரிவித்துள்ளார்.

14.08.2020. 5.00 pm. (வெள்ளிக்கிழமை) ......................... இன்றைய பரிசோதனையில் முழங்காவில் தனிமைப்படுத்தல். மையத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ......................... இன்று 120 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள் :

* போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் -2 பேர்

* போதனா வைத்தியசாலை வெளி நோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்டவர்கள் - 14 பேர்

* முழங்காவில் தனிமைப்படுத்தல் மையம் - 98 பேர்(மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது)

* ஆதார வைத்தியசாலை வல்வெட்டித்துறை - 3 பேர்

* பொது வைத்தியசாலை கிளிநொச்சி - 3 பேர்


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE